சென்னை விமானத்தில் சில்மிஷம்-பிரேசில் நபர் கைது
சென்னை: சென்னை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிரேசில் 'குடி'மகன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்றில் பால் நியூமேன் என்ற 38 வயது சுற்றுலா பயணி வந்து கொண்டிருந்தார். விமானத்தில் ஏறியதில் இருந்து குடிக்க துவங்கிய பால் நியூமேன் வயிறு முட்ட குடித்துள்ளார்.
பின்னர் போதை தலைக்கேற விமான பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த பணிப்பெண் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 1 மணிக்கு விமானம் சென்னை வந்திறங்கியவுடன் அந்த விமான பணிப்பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் குடிபோதையில் இருந்த அந்த பிரேசில் 'குடி'மகனை கைது செய்தனர்.
இன்று காலை போதை தெளிந்து எழுந்த பால் நியூமேன் போலீசிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டார். மேலும் இது போல் இனி நடந்து கொள்ளமாட்டேன் என உறுதியளித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.