For Daily Alerts
Just In
போர் முடிந்தாலும் இலங்கையில் அவசர கால சட்டம் நீடிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்தபோதிலும் கூட ஏற்கனவே அமலில் உள்ள அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு இலங்கை அரசு நீடித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மீதமுள்ள விடுதலைப் புலி போராளிகளையும் பிடிக்க வேண்டியது உள்ளது. எனவேதான் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த 30 வருடமாகவே இலங்கையில் அவசர கால சட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. மாதா மாதம் இதை நீடித்து வருகிறது இலங்கை அரசு.
இந்த சட்டத்தின் மூலம் சந்தேகப்படும் யாரையும் பிடித்து விசாரிக்கும் எல்லையில்லாத அதிகாரம் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிடித்துச் செல்லப்படும் நபரை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் தங்களது பிடியில் வைத்திருக்கவும் படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, June 10, 2009, 12:40 [IST]