காவல் அதிகாரிகளை மிரட்டியதாக ஜெ., வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு டிஸ்மிஸ்
மதுரை: காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
மதுரை அன்புநகரை சேர்ந்த பாண்டித்துரை என்ற வக்கீல், மதுரை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 7.10.2006 அன்று மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, போலீசார் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், நான் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் அதிகாரிகளை சும்மா விட மாட்டேன், இதை போலீசாருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன் என்றும் பேசி உள்ளார்.
இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் உள்ளது.
அதே போன்று நெல்லையில் 9.10.2006 அன்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, போலீசாரை மிரட்டும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர்கள் 2 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஜூடிசியல் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பாண்டித்துரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் தொடர்ந்து அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்று நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், தமிழ்செல்வன், காடுபட்டி கருணாகரன் ஆகியோர் ஆஜரானார்கள். வைகோ சார்பில் மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன், ம.தி.மு.க வக்கீல் சுப்பாராஜ் ஆஜராகினர்.
மனுதாரர் தரப்பில் தொடர்ந்து 3-வது முறையாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications