ரஷ்யாவில் மன்மோகன்-சர்தாரி சந்திப்பு: மும்பை குறித்து பேச்சு?
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி ரஷ்யா செலகிறார். அங்கு அவர் 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்து பேசுகிறார். மும்பை பயங்கரவாத சம்பவத்துக்கு இரு நாட்டு தலைவர்களும் நேரில் பேசி கொள்ளப் போவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் கூட்டு அமைப்பின் ஆண்டு கூட்டம் அடுத்த வாரம் ரஷ்யாவின் எகடாரின்பர்க் நகரில் நடக்கிறது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பார்வையாளராக கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்க பிரதமர் வரும் 15ம் தேதி ரஷ்யா செல்கிறார். அதே போல் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் கலந்து கொள்ள வருகிறார்.
இவர்கள் இருவரும் வரும் 16ம் தேதி சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர மேனனும் உறுதி செய்துள்ளார். ஆனால், மும்பை தாக்குதல் குறித்து பேசப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில்,
ரஷ்யாவில் மன்மோகனும், சர்தாரியும் ஒரே சமயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நிச்சயம் கைகுலுக்கி கொள்வார்கள்.
கூட்டம் நீண்ட நேரம் நடப்பதால், சர்தாரியுடன் பேசுவதற்கு குறைந்த நேரமே கிடைக்கும். அந்த நேரத்தில் எவ்வளவு நேரம் பேசுவார்கள், என்ன பேசுவார்கள் என்பதை இப்போது கூற முடியாது.
பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் இந்தியாவிலும், இந்திய ஹை கமிஷ்னர் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் அறிக்கையை கவனித்து வருகிறது.
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான சூழ்நிலைகளை பாகி்ஸ்தான் உருவாக்க வேண்டும்.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கவேண்டும் என இந்தியா விரும்புகிறது. அதுவரை அவர்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்த தயாராக இல்லை என்றார் சிவசங்கர மேனன்.
ஷாங்காய் கூட்டு அமைப்பு கூட்டத்தை தொடர்ந்து 'பிரிக்' அமைப்பு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். பிரிக் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டத்தில் உலக பொருளாதாரம் குறித்து பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் வரும் 17ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
-
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications