நேபாளத்தின் முதல் பெண் து.பிரதமர் மரணம் - மனீஷா கொய்ராலாவின் அத்தை
இந்தி நடிகை மனீஷா கொய்ராலாவின் அத்தையும், நேபாள நாட்டின் முதல் பெண் துணைப் பிரதமருமான ஷைலஜா ஆச்சார்யா மரணமடைந்தார்.
மரணமடைந்த ஆச்சார்யாவுக்கு வயது 65. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டெல்லி மற்றும் பாங்காக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் மோசமடையவே புதன்கிழமையன்று காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.
நேபாள நாட்டின் முதல் பெண் துணைப் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஷைலஜா. இவர் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அத்தை முறை வருகிறார்.
இந்தியத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் ஷைலஜா. முன்பு மன்னர் ஆட்சி இருந்தபோது அதை எதிர்த்து போராடினார். மன்னர் ஆட்சியில் சிறையில் அடைபடும் சூழ்நிலை உருவானபோது இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications