கோவையிலிருந்து கிளம்பிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ
கோவை: சென்னைக்குக் கிளம்பிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 10.15 மணிக்கு கிளம்பி காலையில் சென்னையை அடையும் சேரன் எக்ஸ்பிரஸ்.
10-ந் தேதி இரவும் சேரன் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளோடு, ரயில் இருகூர் நிலையத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.
அப்போது கார்டு பெட்டியிலிருந்து திடீரென புகை வந்தது.
இதையடுத்து ரயிலை நிறுத்தினர். பெட்டியில் பார்த்தபோது, ஓரத்தில் லேசாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து பெட்டியில் இருந்த தீயணைப்புக் கருவியை பயன்படுத்தி அந்தத் தீயை உடனடியாக அணைத்தனர். தீப் பிடித்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அணைக்கப்பட்டதால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.