தமிழகத்துக்கு அக்கறையில்லையாம்.. கேரளா
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அந்த அணையை முழுவதும் பரிசோதனை செய்தனர். அப்போது அணையில் நீர்க்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணை பலவீனமாக இருப்பதையும் வல்லுனர் குழு உறுதி செய்திருக்கிறது.
புதிய அணை கட்டும் பணிகளை தொடங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அணையின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. எனவே, புதிய அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் அச்சுதானந்தன் விரைவில் கடிதம் அனுப்புவார் என்றார்.












Click it and Unblock the Notifications