சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள 14 மாடி எல்ஐசி கட்டடத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
நேற்று மாலை 3 மணியளவில் எல்ஐசி அலுவலகத்திற்கு தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், கட்டடத்தின் 3வது மாடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறியுள்ளார்.
இதையடுத்து அண்ணா சாலை போலீஸாருக்குத் தகவல் போனது.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் போலீஸார் விரைந்து வந்தனர்.
கட்டடத்தின் 14 மாடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அது புரளி எனத் தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எல்ஐசி கட்டடத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புரளி கிளப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications