அதிமுக முன்னாள் எம்பி டி.ஹீராசந்த் மரணம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அதிமுக முன்னாள் எம்பியும், விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான ஹீராசந்த் மரணமடைந்தார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் ஹீராசந்த் (68). இவர் ராஜ்யசபா உறுப்பினராகவும், திண்டிவனம் நகர்மன்ற தலைவராகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணியாற்றிவர். மேலும் பல்வேறு சங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியின்றி இருந்து வந்தார். இந் நிலையில் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் மரணமடைந்தார்.

இவர் மறைந்த செய்தியை கேட்டதும் விழுப்புரம் மாவட்டம்
மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக.பிரமுகர்கள், மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் , முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் அகியோர் அவரது வீட்டிற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மரணடைந்த ஹீராசந்த்க்கு சுசீலா தேவி என்ற மனைவியும், பப்லாசா, ஜீன்ராஜ், நவீன்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+