For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெட், கிங் பிஷரைத் தொடர்ந்து ஏர் இந்தியாவும் கட்டணத்தை உயர்த்துகிறது!

By Staff
Google Oneindia Tamil News

Air India
மும்பை: தனியார் நிறுவனங்களான ஜெட் மற்றும் கிங்பிஷரைத் தொடர்ந்து, இந்தியாவின் அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் விமானக் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து விமான எரிபொருள் விலை 33 சதவிகிதம் உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி விமானக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஆனாலும் எந்த அளவு உயர்த்துவது என்பதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை, என்றும் இன்னும் இரண்டொரு நாளில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

750 கிமீ வரையிலான பயணத்துக்கு தற்போது 1950 ரூபாயும், அதற்கு மேலான தூரத்துக்கு ரூ.2700-ம் எரிபொருள் சர்சார்ஜாக வசூலிக்கிறது ஏர் இந்தியா.

இதுவே ஜெட் ஏர்வேஸில் ரூ. 2450 மற்றும் 3400 ஆக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் ஏர் இந்தியா குறைந்த சர்சார்ஜே விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் குறைந்த கட்டண விமான நிறுவனங்களான ஸ்பைஸ், கோ ஏர் மற்றும் இன்டிகோ போன்றவை ரூ.2000 மட்டுமே சர்சார்ஜாக விதித்துள்ளன. குறைந்த தூரம், அதிக தூரம் என்ற வித்தியாசம் இவற்றில் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X