For Quick Alerts
For Daily Alerts
Just In
மகாத்மா காந்தி குறித்த பேச்சு - மாயா மன்னிப்பு கேட்க காங். கோரிக்கை
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், தேசத் தந்தையை மிகவும் கண்டனத்துக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் மாயாவதி. அவரது பேச்சால், கோடிக்கணக்கான இந்தியர்களின் மனம் புண்பட்டுள்ளது.
தனது கருத்துக்களை அவர் திரும்பப் பெற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அல்லது அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மாயாவதி பேசுகையில், மகாத்மா காந்தி ஒரு போலி என்று கூறியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் சரி, மகாத்மா காந்தியும் சரி, தலித் மக்கள் குறித்து அக்கறையே காட்டாதவர்கள் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
Comments
இந்தியா அரசியல் மாயாவதி விமர்சனம் committee காங் mahatma gandhi apology மன்னிப்பு மகாத்மா காந்தி mayawati
Story first published: Thursday, June 18, 2009, 11:51 [IST]