நிதிப் பகிர்வு குறித்து ஆலோசனை- பெங்களூரில் 6 நகர போலீஸ் கமிஷனர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு வழங்கும் நிதியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை உள்ளிட்ட 6 பெருநகரங்களின் காவல்துறை ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடந்தது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய மாநகரங்களின் காவல்துறையை பலப்படுத்தவும், மாநகர பாதுகாப்பை நவீனப்படுத்தவும் மத்திய அரசு பெருமளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்து விவாதிக்க இந்த மாநகரங்களின் காவல்துறை ஆணையர்கள் நேற்று பெங்களூரில் கூடி ஆலோசித்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications