Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் என்று கூறி ரூ. 50 லட்சம் பணம் பறி்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ. 50 லட்சம் பணத்துடன் சென்றவரை போலீஸ்காரர்கள் என்று கூறி்க் கொண்டு வழிமறித்த நான்கு பேர் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கமல்ராஜ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு கீழ்பாக்கத்தில் உள்ளது.

கமல்ராஜிடம் அவரது நிறுவன உரிமையாளர் ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்து அதை நிறுவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

அதை வாங்கிக் கொண்டு கமல்ராஜ் கீழ்பாக்கத்தில் இருந்து செளகார்பேட்டைக்குக் பைக்கி்ல் கிளம்பினார்.

வேப்பேரி அருகே சென்றபோது 4 பேர் அவரை தடுத்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டு, கமல்ராஜிடம் இருந்த பையை பறித்தனர்.

இவ்வளவு பணம் ஏது, அதற்கான ரசீது எங்கே என்று கேள்விகளைக் கேட்டுவிட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தங்களை சந்தி்க்குமாறு கூறிவிட்டு 2 பைக்குகளில் கிளம்பினர்.

கமல்ராஜ் அவர்களை பைக்கில் பின் தொடர்ந்தார். ஆனால் அவர்கள் குறுக்குச் சாலைகளில் புகுந்து தப்பிவிட்டனர்.

இது குறித்து வேப்பேரி போலீசில் கமல்ராஜ் புகார் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+