போலீஸ் என்று கூறி ரூ. 50 லட்சம் பணம் பறி்ப்பு
சென்னை: ரூ. 50 லட்சம் பணத்துடன் சென்றவரை போலீஸ்காரர்கள் என்று கூறி்க் கொண்டு வழிமறித்த நான்கு பேர் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கமல்ராஜ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு கீழ்பாக்கத்தில் உள்ளது.
கமல்ராஜிடம் அவரது நிறுவன உரிமையாளர் ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்து அதை நிறுவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
அதை வாங்கிக் கொண்டு கமல்ராஜ் கீழ்பாக்கத்தில் இருந்து செளகார்பேட்டைக்குக் பைக்கி்ல் கிளம்பினார்.
வேப்பேரி அருகே சென்றபோது 4 பேர் அவரை தடுத்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டு, கமல்ராஜிடம் இருந்த பையை பறித்தனர்.
இவ்வளவு பணம் ஏது, அதற்கான ரசீது எங்கே என்று கேள்விகளைக் கேட்டுவிட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தங்களை சந்தி்க்குமாறு கூறிவிட்டு 2 பைக்குகளில் கிளம்பினர்.
கமல்ராஜ் அவர்களை பைக்கில் பின் தொடர்ந்தார். ஆனால் அவர்கள் குறுக்குச் சாலைகளில் புகுந்து தப்பிவிட்டனர்.
இது குறித்து வேப்பேரி போலீசில் கமல்ராஜ் புகார் செய்துள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications