For Quick Alerts
For Daily Alerts
Just In
பன்றிக் காய்ச்சல் பீதியால் குமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
கன்னியாகுமரி: பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து விட்டது.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளால் பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து கார் முலம் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா சீசன் முடிந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு அதிகளவு வருவார்கள்.
ஆனால் தற்போது வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் நோயால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய சுற்று பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
Comments
தமிழ்நாடு பீதி கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் tamilnadu kanyakumari tourists பன்றிக் காய்ச்சல் swine flu ஸ்வைன்
Story first published: Thursday, June 18, 2009, 13:07 [IST]