For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கண்ணாமூச்சி' காட்டும் பருவ மழை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை கேரளத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு முன்பாகவே தொடங்கினாலும் மழை முழுமையாக பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.

அதே போல நாட்டின் பிற பகுதிகளிலும் பருவ மழை தாமதமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மழையால் சாகுபடியும் தள்ளிப் போனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவு அல்லது மாலை நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புண்டு என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X