3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை - ஆகஸ்டில் ஏலம்

அடுத்த தலைமுறைக்கான நவீன செல்போன் சேவைகளை உள்ளடக்கிய 3-வது தலைமுறை (3 ஜி) ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அலைவரிசை வசதி இருந்தால் போதும், செல்போனில் அதிவேக இண்டர்நெட், வீடியோஸ் மற்றும் சில மதிப்பு கூட்டு சேவைகளைப் பெறலாம்.
இப்போதைக்கு மத்திய அரசின் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுடன், 6 தனியார் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒதுக்கீட்டிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை ரூ.2 ஆயிரத்து 20 கோடியாக நிர்ணயம் செய்ய தொலைத் தொடர்புத்துறை விரும்பியது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக உயர்த்துமாறு அறிவுறுத்தியது.
இதனைத தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா ஆகியோர் சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், இந்தப் பேச்சுக்கள் நடந்தன. இறுதியில் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
அதன்படி, குறைந்த பட்ச ஏலத்தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக நிர்ணயம் செய்ய ஒப்புக் கொண்டது மத்திய தகவல் தொடர்புத் துறை. ஆகஸ்டு மாத மத்தியில் ஏலம் நடைபெறும். இந்த ஏல விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.32 ஆயிரத்து 320 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலப் போட்டியில், அரசுத் துறையின் இரு நிறுவனங்கள் தவிர, பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடாஸ் மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வயர்லெஸ் பிராடுபேண்ட் எனப்படும் வி மேக்ஸ் சேவையையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது தொலைத் தொடர்பு அமைச்சகம். இதற்கு ஆரம்பத்தில் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.1010 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.2020கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications