ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டம்: மேடாஸ் நீக்கம்!
டெல்லி: ரூ.12000 கோடி மதிப்பீட்டில் உருவாகவிருந்த ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து மேடஸ் நிறுவனம் விலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனரும், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் சிக்கி சிறையில் இருப்பவருமான ராமலிங்க ராஜூவின் மகன்கள் நிர்வாகத்தில் உள்ளதுதான் மேடாஸ் நிறுவனம். சத்யம் நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு இந்த நிறுவனமும் ஒரு காரணம்.
இன்னொரு பக்கம் சத்யம் சாம்ராஜ்யம் சரிந்த போதே, மேடாஸும் பல பிரச்சினைகளில் சிக்கி நெருக்கடிக்குள்ளானது.
ராமலிங்க ராஜு சர்வ பலத்துடன் இருந்த போது ஹைதராபாத் ரயில் திட்டத்தை நிறைவேற்ற மேடாஸ் மெட்ரோ கன்ஸார்டியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில் மேடாஸ் இன்ப்ரா, நவபாரத் மவென்சர்ஸ், ஐடல் தாய் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இடம்பெற்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேடாஸ் மெட்ரோ எனும் புதிய நிறுவனத்தையே மேடாஸ் துவங்கியது. ரூ 12000 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் சத்யம் மோசடிக்குப் பின் எழுந்த புதிய சூழல் காரணமாக எதிர்பார்த்தபடி நிதியைத் திரட்ட முடியவில்லை மேடாஸ் நிறுவனத்தால்.
எனவே ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்ட பணியிலிருந்து மேடாஸ் மெட்ரோ ரயில் கன்சார்டியம் விலக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ள புதிய நிறுவனம் மற்றும் இதர விவரங்கள் குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இதனால் ஹைதராபாத் மக்களின் மெட்ரோ ரயில் கனவு நிறைவேறுவது மேலும் தள்ளிப் போயுள்ளது.












Click it and Unblock the Notifications