வணங்காமண் நிவாரணக் கப்பல் - பொன்முடியிடம் கிருஷ்ணா உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐரோப்பியத் தமிழர்களால் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கூடிய வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்துள்ளார்.
இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை வன்னிப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு விநியோகிக்க உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில்,உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் டெல்லி விரைந்து கிருஷ்ணாவிடம், முதல்வரின் கடிதத்தை நேரிலும் வழங்கி கோரிக்கை விடுத்தார்.
இதைப் பரிசீலித்த கிருஷ்ணா, நிச்சயம் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications