நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை மீண்டும் விற்க முயற்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கிறது மத்திய அரசு. ஆனால் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.

இந்தியாவில் நிலக்கரி தொடர்பான 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

மத்திய நிலக்கரித் துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெயிஸ்வால் இதுகுறித்துக் கூறுகையில், இந்திய நிலக்கரி நிறுவனம், அதன் 7 துணை நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் குறிப்பிட்ட சில பங்குகளை தனியாருக்கு விற்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் 93.5 சதவீத பங்குகளை மத்திய அரசு தன்வசம் வைத்துள்ளது. ஆனால் இதில் மேலும் 10 சதவீத பங்குகளை மத்திய அரசு 2006-ல் விற்க முயன்றது. அப்போது தி.மு.க. அரசுதான் அதைத் தடுத்து நிறுத்தியது. அன்றைக்கு காங்கிரஸ் அரசு மைனாரிட்டியாக இருந்ததால் திமுகவுக்கு உடனடியாகப் பணிந்தது.

ஆனால் மறுபடியும் இப்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனப்பங்குகளை விற்க முயல்கிறது காங்கிரஸ் அரசு.

காரணம் முன்பை விட பலமான நிலையில் காங்கிரஸ் அரசு இருப்பதே.

இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, அரசின் இந்த முயற்சியை இப்போதும் கடுமையாக எதிர்ப்போம் என திமுக கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+