லால்கர் நக்சலைட் வன்முறை மிகப் பெரிய திட்டமிட்ட சதி - சிபிஎம்
இதுகுறித்து நேற்று கூடிய கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், மேற்கு வங்கத்தில் சிபிஎம்மை அழிக்கவும், அதன் பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டு சில சக்திகள் செய்த சதிதான் லால்கர் வன்முறை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சிபிஎம் சொத்துக்கள் மீதும், அதன் தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் இதுகுறித்துக் கவலை கொள்ள வேண்டும்.
லால்கரில் திரினமூல் காங்கிரஸின் நேரடி அல்லது மறைமுகமான ஆதரவுடன், மாவோயிஸ்ட் அமைப்பு தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. சிபிஎம் தொண்டர்களைத் தாக்கி கொலை செய்தது.
திரினமூல் தலைமையிலான கூட்டணி நந்திகிராமில் செய்தவற்றை லால்கரில் உள்ள மாவோ தலைவர்கள் வெளிப்படையாக பாராட்டிப் பேசியுள்ளது இதை நிரூபிப்பதாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.