சென்னையில் 2 பேருக்கு ஸ்வைன்-இந்தியாவில் 59

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக சுகாதார மையத்தின் கணக்கு படி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 44 ஆயிரத்து 287 ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 180 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஸ்வைன் ப்ளூ அறிகுறி கொண்ட 421 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 138 பேர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
20 பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் நெருங்கி பழகியதால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றவர்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பதை தெரிவித்தவர்கள்.
சென்னையில் 2 பேருக்கு...
இந்நிலையில் கடந்த ஜூன் 13ம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் இருந்து சென்னை வந்த 29 வயது கணவனுக்கும், அவரது 25 வயது மனைவிக்கும் ஸ்வைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 17ம் தேதி நியூயார்க் நகரிலிருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள்.
32 பேர் டிஸ்சார்ஜ்...
இது டெல்லி சுகாதார செயலர் ஜெ.பி.சிங் கூறுகையில், நோயாளிகள் வேகமாக குணமாகி வருகின்றனர். இதுவரை 32 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி விட்டனர். இன்று மேலும் 5 அல்லது 6 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ அபாய கட்டத்தை நெருங்ககூட இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications