கற்பழித்து கடத்தப்பட்ட பெண் 51 நாட்களுக்கு பின் மீட்பு-டாக்டர் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே காணாமல் போன 17 வயது இளம் பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். தன்னை பெண் டாக்டரின் கணவர் ஒருவர் கற்பழித்து கடத்தி வைத்திருந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண் டாக்டரை கைது செய்தனர். அவரது கணவரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காமராஜர் சாலையை சேர்ந்த செய்யது என்பவரின் மகள் ரிபாயா (17). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலே இருந்தார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பெண் டாக்டர் குமுதா என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒத்திக்கு இருந்தனர்.
வீட்டில் இருந்த ரிபாயா அடிக்கடி அமுதா வீட்டுக்கு சென்று சிறுசிறு வேலைகளை செய்து வந்தார். அவருக்கு மாதம் ரூ. 500 சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள் ரிபாயா வீட்டிலிருந்து திடீரென மாயமாகிவிட்டார்.
இதையடுத்து செய்யது, குளச்சல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 51 நாட்களுக்கு பின் நேற்று குளச்சல் பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்களின் துணையுடன் நின்று கொண்டிருந்த ரிபாயாவை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார், ரிபாயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம்:
டாக்டர் அமுதா மருத்துவமனைக்கு சென்ற பின்னர் அவருடைய கணவர் கண்ணன் என்னை அடிக்கடி தொட்டு பேசுவார். நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் என்னை கற்பழித்துவிட்டார்.
தனது மனைவி அமுதாவுக்கு தெரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றும், தனது பிள்ளைகள் இரண்டு அனாதைகளாகிவிடுவார்கள் என்றும், இந்த பழி சொல்லுக்கு நீ தான் ஆளாக வேண்டும் என கூறி என்னை மிரட்டினர். பின்னர் அவர் என்னை பல முறை பலவந்தமாக கற்பழித்தார்.
இந்நிலையில் நான் ஒரு நாள் கர்ப்பம் ஆனேன். இதை கண்ணனிடம் கூறினேன். அப்போது அவர் துணி, நகைகள் எடுத்து கொண்டு வா உன்னை வேறொரு இடத்தில் குடியமர்த்துகிறேன் என கூறினார். நாங்கள் இருவரும் பேசி கொண்டிருந்ததை டாக்டர் அமுதா கேட்டுவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன், அமுதாவை சமாதானப்படுத்தினார். பின்னர் டாக்டர் அமுதா எனக்கு சில மாத்திரை வாங்கி கொடுத்தார். பின்னர் என்னை வீட்டிலீருந்து ஒரு கார் டிக்கிக்குள் வைத்து அடைத்து திருவிதாங்கோடு சென்றனர். அங்கு அவர்களது மருத்துவமனையில் வேலை பார்க்கும் லலிதா என்ற பெண்ணின் உறவினர்கள் வீட்டில் தங்க வைத்தனர்.
பின்னர் என்னை அங்கிருந்து அழைத்து சென்று ஒரு அனாதை காப்பகத்தில் கீதா என பெயர் மாற்றி என்னை சேர்த்தனர். அங்கு நான் அனாதை இல்லை என்ற உண்மையை கூறியவுடன் என்னை மீண்டும் திருவிதாங்கோட்டில் லலிதாவின் உறவினர்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டனர்.
அவர்களிடம் நான் உண்மையை கூறியதும். அவர்கள் என்னை குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து வந்தனர் என்றார்.
இதையடுத்து போலீசார் பெண் டாக்டர் அமுதாவை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவரது கணவர் கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் விசாரணையின் போது டாக்டர் அமுதா கூறுகையில்,
ரிபாயா எனது கணவரால் கர்ப்பமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் அவரை என் வீட்டில் தங்கவைத்து கருவை கலைக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியாமல் இருக்க கார் டிக்கிக்குள் வைத்து திருவிதாங்கோடு கடத்தி சென்றோம்.
அவர் அங்கு உண்மையை சொல்லியதால் நாங்கள் மாட்டிகொண்டோம் என்றார் அவர்.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்ரு டாக்டர் அமுதாவின் வீட்டை சூறையாடியது. ஜன்னல் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது. அங்கிருந்த டிவி, பிரிட்ஜ் மற்றும் நாற்காலிகளை தூக்கிபோட்டு உடைத்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications