For Daily Alerts
Just In
காந்திகிராம அறக்கட்டளை புரவலராக எம்.எஸ்.சுவாமிநாதன்
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை புரவலராக எம்.எஸ்.சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் புகழ் பெற்றது திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை செயல்பாட்டுக்கு இந்தியா முழுமைக்கும் தனி மரியாதை உண்டு.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம அறக்கட்டளை இணை செயலாளர் சிவக்குமார் கூறுகையில்,
காந்திகிராம அறக்கட்டளை புரவலராக முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் செயல்பட்டு வந்தார். அவர் காலமானதையடுத்து புரவலர் பதவி காலியாகவே இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய புரவலராக தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
Story first published: Tuesday, June 23, 2009, 14:47 [IST]