'இது மக்கள் பட்ஜெட்!'-மாண்டேக் சிங்
டெல்லி: அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் மக்கள் பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்த விவரத்தை என்னால் சொல்ல முடியாது. காரணம் அவை இப்போதைக்கு ரகசியமானவை என்றார் அலுவாலியா.
பட்ஜெட் குறித்து அலுவாலியா கூறியதாவது:
2009-2010-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேர்தலுக்கு முன் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். அதற்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தற்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக உள்ளார்.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 9 சதவீதத்தை எட்ட வேண்டும் என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.
வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங்களை துரிதப்படுத்துவதை அரசு பிரதானமாக மேற்கொள்ளும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கிலோ ரூ.3 விலையில் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் யோசனையும் இந்த பட்ஜெட்டில் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வேளாண் மற்றும் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைய சூழலில் நடப்பு நிதி ஆண்டில் எந்த அளவு வளர்ச்சி இருக்கும் என கணிக்க முடியாது. இருப்பினும் கடந்த நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்ததால் இம்முறை 7 சதவீதத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் இதை ஈடு செய்ய முடியும். செலவுகளை அதிகப்படுத்துவது நல்லது. இருப்பினும் அதற்காக வரம்பு மீறிய செலவினங்களை அனுமதிக்க முடியாது," என்றார் மாண்டேக் சிங் அலுவாலியா.
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே, இந்த பட்ஜெட் பொதுமக்களுக்கான நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவழிக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications