309 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கிய சென்செக்ஸ்!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே 309 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பம் பரபரப்பாக இருந்தாலும், மாலைக்குள் சென்செக்ஸ் பலவீனமடைந்து 195 புள்ளிகளை இழந்தது.
இன்றும் அந்த வீழ்ச்சி தொடர்ந்தது.
வங்கித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பெரிதும் வீழ்ச்சியடைந்தன. ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் போன்ற பங்குகள் அதிக நஷ்டத்தைத் தந்தன. ரிலையன்ஸ், ஓஎன்ஜிஸி, கிராஸிம் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல லாபம் தந்தன.
தேசியப் பங்குச் சந்தை நிப்டியிலும் 92 புள்ளிகள் சரிந்தது இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில். மற்ற ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. ஹாங்காங் பங்குச் சந்தை 3 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சியடைந்தது.
ஜப்பானின் நிக்கி குறியீட்டெண்கள் 2.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.
சர்வதேச அளவில் இன்றைய வர்த்தகத்தின்போது முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications