இன்னொரு இந்திய மாணவர் மீது தாக்குதல்-இதுவரை 16

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிர் ராஸா அலி கான் என்பவர் விக்டோரியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஹாஸ்பிடாலிட்டி படிப்பு படித்து வருகிறார்.
இவர் சலூனில் முடிவெட்டிவிட்டுத் திரும்பி வந்தபோது அவரை இரு ஆஸ்திரேலிய வாலிபர்கள் வழி மறித்து பணம் கேட்டனர்.
அவர் தர மறுக்கவே அவரைத் தாக்கினர். முகத்தில் மாறி மாறி குத்திய அவர்கள் அவர் மயங்கி விழுந்த பின்னர் ஓடிவிட்டனர். 10 நிமிடம் கழித்து வந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தத் தாக்குதலில் அவரது கண்களுக்குக் கீழும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தையல்கள் போடப்பட்டன
நாடு திரும்பிய 46 மாணவர்கள்..
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 46 மாணவர்கள் இந்தியா திரும்பி வந்துவிட்டனர்.
இத் தகவலை மெல்போர்னைச் சேர்ந்த மாணவர் பத்திரிக்கையான ஸ்டூடன்ட் மேகசீனின் ஆசிரியர் திருவல்லம் பாஷி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications