மின்னணு எந்திரம்: முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை-சாவ்லா
ஷில்லாங்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாரும் எந்த முறைகேடும் செய்ய முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடந்த அனைத்து மாநில தேர்தல் ஆணையாளர்கள் கூட்டத்தில் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளர் நவின் சாவ்லா கலந்து கொண்டார்.
அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு கட்சிகள் தெரிவித்து வரும் புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
நமது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் வாக்குப் பதிவு எந்திரங்களும் முற்றிலும் மாறுபட்டது.
அவர்கள் எந்திரங்கள் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால், நமது எந்திரங்களில் ஒரு சிப் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதை வெளியிலிருந்து யாராலும் மாற்ற முடியாது. இதனால் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புகளும் சிறிதும் இல்லை.
நம் நாட்டில் இருக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு பொது துறை நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. அவை தனியாரிடம் விடப்படவில்லை.
இது தொடர்பாக எழுந்த பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்கள் விசாரித்துவிட்டன. ஆனால், இவை அனைத்தும் வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்றும், அதை முழுமையாக நம்பலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளன.
அதே போல் முன்னாள் சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பிவி இந்திரேசன் தலைமையிலான மூன்று நபர் தொழில்நுட்ப கமிட்டியும் இந்த சந்தேகங்கலை அர்த்தமில்லாதவை என கூறியுள்ளது.
வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக தற்போது எதுவும் சொல்ல முடியாது. நாடு முழுவதும் ஆரோக்யமான விவாதம் நடத்தி முடிவு செய்யலாம் என்றார் நவின் சாவ்லா.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications