வங்கி கணக்குகள் முடக்கம்...பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஸ்தம்பித்தது!

மேலும் சென்னை வருமான வரித்துறை, இந்த நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளதால் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் மும்பையைச் சேர்ந்த பட்னி நிதி நிறுவனத்துக்கு ரூ.5 கோடி கடன் தரவேண்டியிருந்தது. ஆனால் இந்தக் கடனை சொன்னபடி தராமல் இழுத்தடித்து பிரமிட் சாய்மீரா.
இதனால் நீதிமன்றத்துக்குப் போன பட்னி நிறுவனம், சென்னை நீதிமன்றத்தில் பிரமிட் சாயம்மீராவுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அதில், தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தும் அளவு பிரமிட் சாய்மீரா நிறுவனம் இல்லை என்றும், இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தை முடக்கி, சொத்துக்களை மதிப்பிட்டு ஏலத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பிரமிட் சாய்மீராவின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய ஒரு தற்காலிக பொறுப்பாளரை நியமித்தது.
இதனை எதிர்த்து பிரமிட் சாய்மீரா எதிர் மனு தாக்கல் செய்தது. இதில், பிரமிட் நிறுவனம் நல்ல நிலையில் இயங்குவதாகவும், நிறுவனத்திடம் போதிய நிதி ஆதாரங்கள் உள்ளதாகவும் சாய்மீரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடர்ந்துள்ள பட்னி நிறுவனத்துக்கு 2008 இறுதிவரை வட்டியாகவே ரூ.22.11 லட்சம் செலுத்தியுள்ளதாகவும் கூறியது.
மேலும் இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ. 721 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ள பிரமிட் சாய்மீரா, தற்காலிக பொறுப்பாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரியது.
ஆனால் இதற்கு மறுத்துவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணைக்கான தேதி வரை மதிப்பீட்டாளர் நியமனம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, பிரமிட் சாய்மீராவின் அனைத்து சென்னை வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது. இதனால் பிரமிட் சாய்மீராவின் வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications