நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்-எஸ்ஏசி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்ல்: நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் பணம் வாங்கி ஓட்டுப்போடுவது அகலும் என்று திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திண்டுக்கல்லை மையமாக வைத்து கரிசக்காட்டு காளை என்ற படம் எடுக்க உள்ளேன். திண்டுக்கல், அம்பாசமுத்திரம், குற்றாலம், சிம்லா ஆகிய இடங்களில் படம் எடுக்கப்பட உள்ளது.

நடிகர் விஜய் மாதிரி உள்ள ஸ்டார் நடிகர்களின் படங்களை இயக்குவதில்லை; தயாரிப்பு மட்டுமே செய்கிறேன்.

நான் இதுவரை 66 படங்கள் ஆக்சன் படமாக எடுத்துள்ளேன். முதன் முறையாக 67-வது படமாக கிராமத்து படம் எடுக்கப்படுகிறது. கிராமத்தில் தான் வன்முறை அதிகமாக உள்ளது. இது நகரத்திற்கும் பரவுகிறது.

சமூக, பொதுநோக்குள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதில் எனது மகன் விஜய்யும் ஒருவர்.

இந்தியாவை முழுமையான வல்லரசாக்க இளைஞர்களால் தான் முடியும். காமராஜர், அண்ணாத் துரை போன்ற தன்னலம் கருதாதவர்கள் அரசியலில் இருந்துள்ளனர்.

நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் பணம் வாங்கி ஓட்டுப்போடுவது அகலும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+