இலங்கை-இப்போதைக்கு ஐ.எம்.எப் கடனுதவி இல்லை!
ஐ.நா.: இலங்கை கோரியுள்ள கடனுதவி குறித்து இதுவரை சர்வதேச நிதியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அமைச்சர் மார்க் மலூச் பிரவுன் இதுகுறித்து ஐ.நாவில் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளரிடம் கூறுகையில், இலங்கை கோரியுள்ள 1.9 பில்லியன் டாலர் கடன் தொகை குறித்து இதுவரை சர்வதேச நிதியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதுவரை அதுகுறித்து விவாதமே நடைபெறவில்லை. எனக்குத் தெரிந்து அதுதொடர்பாக எந்த அசைவும் இல்லை என்றார்.
இதன் மூலம் இலங்கை கோரியுள்ள கடன் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே, கொழும்பில் இரண்டு ஐ.நா. பணியாளர்கள் கடத்தப்பட்டது குறித்து இதுவரை ஐ.நா. கருத்தே தெரிவிக்காமல் உள்ளது.
இதுகுறித்து பிரவுன் கூறுகையில், பல்வேறு நாடுகளும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளன. நாங்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளோம் என்றார்.
இந்த கடத்தல் குறித்து பான் கி மூனின் செயலாளர் மான்டோஸ் கூறுகையில், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
பர்மியர்களைக் காப்பாற்றினேன் .. பான் கி மூன் தம்பட்டம்
இந்த நிலையில் அமெரிக்காவின் சார்லி ரோஸ் டிவி ஷோவில் பங்கேற்றுப் பேசிய பான் கி மூன், இலங்கை இனப்படுகொலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் மியான்மர் குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், மியான்மரில் 5 லட்சம் மக்களை நான் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து காப்பாற்றினேன் என்றார்.
இதுகுறித்து ஐ.நா.வுடன் தொடர்புடைய ஒரு தமிழர் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கையில், 5 லட்சம் பர்மியர்களை காப்பாற்றினேன் என்று கூறும் பான் கி மூன் மறைமுகமாக 20 ஆயிரம் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றத் தவறி விட்டதை ஒப்புக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம் என்றார்.
எந்த அடிப்படையில் 5 லட்சம் பர்மியர்களை காப்பாற்றினேன் என்று பான் கி மூன் கூறுகிறார் என்று அவரது செயலாளர் மான்டோஸிடம் கேட்டதற்கு, மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு அந்த உதவிகள் கிடைக்கச் செய்ததை மனதில் கொண்டே அவ்வாறு பான் கி மூன் கூறியுள்ளார் என்றார்.
அப்படியானால் இலங்கையில் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்யப்படவில்லை என்பதையும் பான் கி மூன் மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக இன்னர் சிட்டி பிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications