செபம்டம்பரில் அமெரிக்கா போகிறார் மன்மோகன் - ஒபாமாவை சந்திக்கிறார்
டெல்லி: செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்துப் பேசகிறார்.
அமெரிக்க அதிபரான பின்னர் ஒபாமாவை முதல் முறையாக இப்போதுதான் சந்திக்கப் போகிறார் பிரதமர்.
செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகரில் ஜி -20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு அவர் வாஷிங்டன் செல்கிறார்.
அங்கு அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்புக்கு முன்னோடியாக வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஜூலை மாதம் டெல்லி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஒபாமாவுடனான சந்திப்பின்போது பாகிஸ்தான் விவகாரம் குறித்து மன்மோகன் சிங் முக்கியமாக விவாதிப்பார் எனத் தெரிகிறது. மேலும் அணு சக்தி ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications