For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிசிஎல் நிறுவனத்திடமிருந்து பெல்லுக்கு ரூ. 170 கோடி ஆர்டர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: சென்னையைச் சேர்ந்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து, மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் கனரக மின்னணுக் கழகத்திற்கு (பெல்) ரூ. 160 கோடி ஆர்டர் கிடைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெல் நிறுவனம், சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிறுவனத்தில், 20 மெகாவாட் திறன் கொண்ட காஸ் டர்பைன் அடிப்படையிலான மின் உற்பத்தி நிறுவனத்தை அமைத்துத் தரும்.

இந்த மின் உற்பத்திப் பிரிவு, மணலி சுத்திகரிப்பு ஆலையின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான காஸ் டர்பைன் ஜெனரேட்டர், வெப்பக் குறைப்பு ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை வடிவமைத்து அதை உருவாக்கி பொருத்தும் பணியை பெல் நிறுவனம் மேற்கொள்ளும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X