விஷமப் பேச்சு-கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
தாவணகரே: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியா இன்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் ஹொன்னாலி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரேணுகாச்சாரியா. ஹட்டி தங்கச் சுரங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இவர் மீது தாவணகரே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தற்போது ரேணுகாச்சாரியா கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக முன்ஜாமீன் கோரி ரேணுகாச்சாரியா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து ரேணுகாச்சாரியாவை போலீஸார் கைது செய்தனர்.
முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது ரேணுகாச்சாரியாவை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக போலீஸாரை கடுமையாக விமர்சித்தது உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications