மும்பை: 8 வழி கடல் பாலத்தை திறந்து வைத்தார் சோனியா
மும்பை: மும்பையில், பந்த்ரா-ஒர்லி ஆகிய பகுதிளை இணைக்கும் வகையில் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதலாவது கடல் மேல் அமைந்துள்ள பிரமாண்ட பாலம் இது. எட்டு வழிப் பாலமான இது ரூ. 1600 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
மும்பையின் வடக்கிலும், தெற்கிலும் இருக்கும் பந்த்ரா மற்றும் ஒர்லி பகுதிகளை இது இணைக்கிறது. 5.6 கிலோ மீட்டர் நீளமுடையது இப்பாலம். முற்றிலும் இரும்பு கேபிள்கள் மூலம் இந்தப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இப்பாலம் வெகுவாக உதவும். இந்தப் புதிய பாலத்தால் மும்பை மக்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.
பாலத் தொடக்க விழா இன்று மும்பையில் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு சோனியா காந்தி பாலத்தை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.
மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், துணை முதல்வர் சகன் புஜ்பால், மத்திய அமைச்சர்கள் சரத்பவார், விலாஸ் ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே, பிரபுல் படேல், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications