விதிகளை மீறி்க் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க முடிவு - சிஎம்டிஏ நோட்டீஸ்
சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் விக்ரம்கபூர் கூறுகையில்,
சென்னையில் வீடு கட்டுவதற்கோ, பெரிய கட்டிடங்களை கட்டுவதற்கோ சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சிலர் அனுமதி என்று ஒரு திட்ட வரைபடத்தை அளித்து விட்டு கட்டிடம் கட்டும்போது அதை மீறி பெரிய கட்டிடங்களை கட்டி விடுகின்றனர்.
இது போன்று வரைமுறையை மீறி கட்டிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முன்பு உடனடியாக இடிக்கப்படும். ஆனால் தற்போது முதலில் சீல் வைத்து விட்டு பின்னர் இடிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கொண்டிதோப்பு, அய்யா முதலி தெருவில் வரன்முறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2007 ஜூலை 27-க்கு முன்பு வரன்முறை மீறி கட்டிய கட்டிடங்களை தற்போது இடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும், தமிழக அரசின் அவசர சட்டம் 2007-ன் மூலம் வரன்முறை மீறிய கட்டிடங்களை ஒரு ஆண்டிற்கு இடிக்காமல் காப்பதற்கு கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் மேல் தொடரப்பட்ட வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
அதனால் 2007 ஜூலை 27-ம் தேதிக்குப் பின் வரன் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தற்போது இடிப்பதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்களை இடிப்பதற்கு விதிமுறை மீறி கட்டிய உங்கள் கட்டிடங்களை ஏன் இடிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அவர்களின் பதில் கிடைத்தவுடன் பதில் திருப்தியாக இல்லாமல் இருந்தால் கட்டிடங்களை சீல் வைத்து இடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திற்கு வரன்முறை மீறி இன்னொரு தளம் கட்டப்பட்டுள்ளது. அதை ஏன் இடிக்க கூடாது என்று விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பதில் கிடைத்தவுடன் நாங்கள் மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ்












Click it and Unblock the Notifications