திருச்செந்தூர் கும்பாபிஷேகம்-சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்கள் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்களில் சில ரயில்கள் தற்போது திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (0655) செவ்வாய்கிழமை (இன்று) மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை காலை 8 மணிக்கு திருச்செந்தூரை சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக எழும்பூருக்கு ஜூலை 1ம் தேதி பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் (0656) புறப்படும். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து, மறுநாள் காலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு ஜூலை 1ம் தேதி இரவு 8.25 மணிக்கு சிறப்பு ரயில் (0659) புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து ஜூலை 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (0660) புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications