249 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்து அரசு சாதனை

பீகார் மாநிலம் மட்டும் இந்த கொள்முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு இதுவரை 248.80 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சாதனை அளவாகும். கடந்த ஆண்டு இதே சீசனில் 226.89 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
பீகாரில் மட்டும் இன்னும் கொள்முதல் நடைபெறவில்லை. அங்கு தொடர்ந்து நடைபெறும்.
கோதுமைக்கு மார்க்கெட்டிங் சீசன் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையாகும் என்றார்.
இந்த ஆண்டு கோதுமை நல்ல விளைச்சலைக் கண்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலையும் குவின்டாலுக்கு ரூ. 1080 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் கோதுமை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் உணவுக் கழகம் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகித்து வருகிறு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications