Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட சென்னை இணை ஆணையர் ரவி ஐஜி ஆனார் - 8 டிஐஜிகளுக்கு பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னை இணை ஆணையர் ரவி உள்ளிட்ட 8 டிஐஜிகளுக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கை..

ரவி - வட சென்னை இணை ஆணையரான இவர் பதவி உயர்வுடன் சென்னை தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

அம்ரேஷ் பூஜாரி - திண்டுக்கல் டிஐஜியான இவர் போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

கருணாசாகர் - ஆயுதப்படை டிஐஜியான இவர் திருச்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் நெல்சன் - மண்டபம் டிஐஜியான இவர் அதே இடத்தில் ஐஜியாக பதவி உயர்வுடன் தொடர்வார்.

ஜெயந்த் முரளி - மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவு டிஐஜியான இவர் அதே இடத்தில் ஐஜியாக தொடருவார்.

குணசீலன் - தென்சென்னை இணை கமிஷனரான இவர் ஐஜி பதவி உயர்வுடன் நெல்லை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி - சிபிசிஐடி (குற்றம்) டிஐஜியான இவர் தென் மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

மஞ்சுநாதா - நெல்லை கமிஷனராக இருக்கும் இவர் ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென் மண்டல ஐஜி சஞ்சீவ்குமார், தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி டிஐஜி சேஷசாயி வடசென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி டிஐஜியான வெங்கட்ராமன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+