வட சென்னை இணை ஆணையர் ரவி ஐஜி ஆனார் - 8 டிஐஜிகளுக்கு பதவி உயர்வு
சென்னை: வட சென்னை இணை ஆணையர் ரவி உள்ளிட்ட 8 டிஐஜிகளுக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கை..
ரவி - வட சென்னை இணை ஆணையரான இவர் பதவி உயர்வுடன் சென்னை தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
அம்ரேஷ் பூஜாரி - திண்டுக்கல் டிஐஜியான இவர் போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
கருணாசாகர் - ஆயுதப்படை டிஐஜியான இவர் திருச்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் நெல்சன் - மண்டபம் டிஐஜியான இவர் அதே இடத்தில் ஐஜியாக பதவி உயர்வுடன் தொடர்வார்.
ஜெயந்த் முரளி - மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவு டிஐஜியான இவர் அதே இடத்தில் ஐஜியாக தொடருவார்.
குணசீலன் - தென்சென்னை இணை கமிஷனரான இவர் ஐஜி பதவி உயர்வுடன் நெல்லை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி - சிபிசிஐடி (குற்றம்) டிஐஜியான இவர் தென் மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
மஞ்சுநாதா - நெல்லை கமிஷனராக இருக்கும் இவர் ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐஜி சஞ்சீவ்குமார், தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி டிஐஜி சேஷசாயி வடசென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி டிஐஜியான வெங்கட்ராமன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்.