3 மாதமாக பெண்ணை கற்பழித்த 2 போலீஸார் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் ஒரு பெண்ணை மிரட்டிக் கற்பழித்த இரண்டு போலீஸார், 3 மாதங்களாக அந்தப் பெண்ணைச் சீரழித்துள்ளனர். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இப்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கம்பா கூடத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவரது தாய்மாமன் கிருஷ்ண கிஷோர். சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ண கிஷோர் சந்தியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் சந்தியாவை மயிலாவரம் லாட்ஜூக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.

அப்போது லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடந்தது. வெங்கட்ராவ், பிரசாத் ஆகிய இரு போலீஸாரும் ரெய்டு நடத்தினர்.

போலீஸாரைப் பார்த்ததும் கிஷோர் ஓடி விட்டார். சந்தியா சிக்கிக் கொண்டார். தனியாக சிக்கிக் கொண்ட சந்தியாவை அந்த இரு காமுகப் போலீஸாரும் சேர்ந்து நிர்வாண கோலத்தில் செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர்.

அதன் பின்னர் தங்களது காம இச்சைக்கு உடன்பாடுமாறு வற்புறுத்தினர். இல்லாவிட்டால் நிர்வாணப் படத்தை வெளியில் விட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு உடன்பட்டுள்ளார் சந்தியா. பின்னர் செல்போன் படத்தைக் காட்டிக் காட்டியே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர் இரு போலீஸாரும்.

அத்தோடு நின்று விடாமல், தங்களுக்குத் தெரிந்த நண்பர்களையும் அழைத்து வந்தனர். பின்னர் பெரும் பெரும் தொழிலதிபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சந்தியாவை உடன்பட வைக்க முயன்றனர்.

இதற்கு மேலும் பொறுத்தால் நாசமாகிப் போய் விடுவோம் என பயந்து போன சந்தியா மகளிர் அமைப்பு ஒன்றிடம் புகார் கொடுத்தார். தனியார் டிவிகளிலும் பேட்டி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இரு போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கைதும் செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+