நிர்வாகத்தின் எச்சரிக்கையை புறக்கணித்து ஏர் இந்தியா ஊழியர்கள் 2 மணி நேரம் ஸ்டிரைக்

முன்பே அறிவித்தபடி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஸ்டிரைக் நடைபெற்றது.
முன்னாக ஊழியர்களுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் விடுத்த எச்சரிக்கையில், ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்திருந்தது.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமான நிலையங்களில் பயணிகளுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இயல்பு நிலை நீடிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
ஆனால் அதைப் புறக்கணித்த ஊழியர்கள் திட்டமிட்டபடி ஸ்டிரைக் செய்தனர்.
டெல்லி, மும்பையில் உள்ள விமான நிலையங்களில் ஊழியர்கள் சரியாக 1 மணிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவப்பு நிறக் கொடிகளைக் கையில் ஏந்தி, பழைய விமான நிலையம் முன்பு கூடிய அவர்கள் நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து ஏசிஇயு பொதுச் செயலாளர் கதியான் கூறுகையில், சம்பளச் சட்டப்படி ஊழியர்களின் சம்பளத்தை நிர்வாகம் தாமதப்படுத்த முடியாது. ஜூலை 10ம் தேதிக்குள் சம்பளத்தை தர வேண்டும். ஏர் இந்தியா நிர்வாகம் ஊழியர்களின் நலனைக் கொள்ளாமல் நடந்து கொள்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஆண்டு பட்ஜெட்டே ரூ. 7000 கோடிதான். ஆனால் ரூ. 6000 கோடிக்கு புதிதாக 68 விமானங்களை வாங்க அது திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
மும்பை, சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர்.












Click it and Unblock the Notifications