சிலை வைப்பதைத் தட்டிக் கேட்ட தலைவர் டிஸ்மிஸ் - மாயா அதிரடி

உ.பியில் சமீபத்தில் பல ஆயிரம் கோடி செலவில் மாயாவதிக்கு சிலை, கான்ஷிராமுக்கு சிலை, அம்பேத்கருக்கு நினைவு மண்டபங்கள், கட்சிச் சின்னமான யானைக்கு நூற்றுக்கணக்கில் சிலை என சிலை அலங்கார களேபரத்தை நடத்தி முடித்தார் மாயாவதி.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. கோர்ட்டும் மாயாவதியின் செயலைக் கண்டித்துள்ளது.
இந்த நிலையில் இந்த சிலை விவகாரத்தை தட்டிக் கேட்ட தனது கட்சிக்காரரை தூக்கி விட்டார் மாயாவதி.
உத்தரகாண்ட் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவருமான முன்னா சிங் செளஹான்தான் நீக்கப்ட்ட தலைவர் ஆவார்.
சரமாரியாக சிலைகள் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர் கேட்டதுதான் செளஹான் செய்த தவறு.
செளஹான் 3 மாதங்களுக்கு முன்புதான் கட்சியிலேயே சேர்ந்தார். இப்போது சிலை விவகாரத்தி்ல அவரது தலையை உருட்டி விட்டார் மாயாவதி.
இதுகுறித்து கட்சியின் தலைவர் மேக்ராஜ் சிங் கூறுகையில், சிலைகள் வைப்பதிலிருந்து மாயாவதி தள்ளி நிற்க வேண்டும். அதற்குப் பதிலாக தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று செளஹான் கட்சித் தலைவர் மாயாவதிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். கடந்த ஒரு மாதமாகவே கட்சி கூட்டம் எதற்கும் செளகான் வருவதில்லை. இதையடுத்து கட்சியை விட்டு செளஹான் நீக்கப்பட்டுள்ளார் என்றார்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications