பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக்-ஐகோர்ட் இன்று தீர்ப்பு
சென்னை: பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு படிக்கும் மருத்துவர்கள், உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு படிக்கும் மருத்துவர்கள் ஊக்கத் தொகை உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து வேலை நிறுத்தம் செய்து வரும் பயிற்சி டாக்டர்களை விடுதியிலிருந்து வெளியேற்ற மருத்துவக் கல்வி இயக்குனரம் உத்தரவு பிறப்பித்தது.
இந் நிலையில் தங்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி டாக்டர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன், நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றால் ஊக்கத் தொகை உயர்வு கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அரசிடம் தெரிவிக்கப்படும் என்றனர்.
இதையடுத்து சங்கப் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து விட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) தங்களது முடிவைக் கூறுவதாகப் பயிற்சி டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பும் இன்று அளிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications