ரிலையன்ஸிலிருந்து ரிலையன்ஸ் கேபிடல் வெளியேறியது
மும்பை: முகேஷ் அம்பானியின் நிர்வாகத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறியது அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த ரூ.129.88 கோடி மதிப்புள்ள பங்குகளை முழுமையாக விற்றுவிட்டு வெளியேறியது ரிலையன்ஸ் கேபிடல்.
நாட்டின் வர்த்தகத்தையே நிர்ணயிக்கிற பெரும் நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (RIL). அம்பானிகள் சொத்துக்களைப் பிரித்துக் கொண்ட போதும், நிறுவனங்களில் அவர்களுக்கிருந்த பங்குகள் அப்படியே தொடர்ந்தன.
அதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்தில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடலுக்கு ரூ.129.88 மதிப்புள்ள பங்குகள் இருந்தன. இந்தப் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு, ரிலையன்ஸிலிருந்து வெளியேறியுள்ளது ரிலையன்ஸ் கேபிடல்.
அதே நேரம் முகேஷ் அம்பானியின் இன்னொரு நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டில் இன்னும் ஒரு சதவிகிதப் பங்கை வைத்துள்ளது ரிலையன்ஸ் கேபிடல்.
அனில் அம்பானியின் மற்றொரு முக்கிய நிறுவனம் ஆர்என்ஆர்எல். இந்த நிறுவனமும் ரிலையன்ஸில் கணிசமான பங்குகளைக் கொண்டுள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விற்பனை தொடர்பாக ஆர்என்ஆர்எல் கோர்ட்டுக்குப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications