மெடல் வாங்குவதற்காக போலி என்கவுன்ட்டர் - எம்.பி.ஏ. பட்டதாரி அநியாயமாக பலி

வெள்ளிக்கிழமை இந்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபரின் பெயர் ரன்பீர் சிங். உ.பி. மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர்.
எம.பி.ஏ படித்தவரான ரன்பீர் சிங்குக்கு டேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அதில் சேருவதற்காக அவர் டேராடூன் வந்திருந்தார்.
தனது நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரை போலீஸார், டலன்வாலா என்ற இடத்தில் வழிமறித்தனர்.
போலீஸாருடன் அவர்கள் மூன்று பேரும் சண்டை போட்டதாகவும், துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறி சுட்டுள்ளனர். இதில் ரன்பீர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இரு நண்பர்களும் அதிர்ஷ்டசமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர்.
அத்தோடு நிற்காத போலீஸார் ரன்பீர் சிங் பையில் கத்தியும், துப்பாக்கியும் இருந்ததாகவும் கூறியது.
ஆனால் இதை ரன்பீர் சிங்கின் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். தேவையில்லாமல் தங்களது மகனை அநியாயமாக போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரன்பீரின் தந்தை ரவீந்தர் சிங் கூறுகையில், எனது மகன் மீது எந்தவித கிரிமினல் வழக்கும் இல்லை. போலீஸார் பதக்கம் பெறுவதற்காக இந்த போலி என்கவுண்ட்டரை நடத்தியுள்ளனர்.
நான் புகார் கொடுக்கக் கூடாது என்று டேராடூன் போலீஸார் என்னை மிரட்டியுள்ளனர் என்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சுனில் வர்மா என்பவர் கூறுகையில், போலீஸார் ரன்பீர் சிங்கை அடித்து இழுத்துச் சென்றனர். துப்பாக்கியின் பின் பகுதியால் அவரை சரமாரியாக அடித்தனர். அதன் பின்னரே சுட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் டேராடூன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications