For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் பட்டப்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை தொடங்கியது. இன்று விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டன.

இன்று தொடங்கி ஜூலை 29ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கு 1.32 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 354 கல்லூரிகளைச் சேர்ந்த அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 85 ஆயிரம் மாணவர் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படவுள்ளன.

முதல் கட்ட கலந்தாய்வில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

இன்று காலை கவுன்சிலிங் தொடங்கியது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடந்தது.

இதில் முதல் 10 இடங்களை பிடித்த பொன்கிருத்திகா, அன்னிஷாரெட்டி, உத்ரா, அக்னீஸ்வர், ஹரிதா ஓம்பிரகாஷ், பிரதீப்குமார், ஆனந்த், அர்ச்சனா, ஷங்கர் ஆகியோருக்கு துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் 3327 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் தரவரிசை அடிப்படையில் 332 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 இடங்களும் மற்றும் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.

நாளை முதல் 3 நாட்கள் தொழில்நுட்ப பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 9-ந்தேதி ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 10-ந்தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

தினமும் 3500 பேர் வீதம் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. கட்-ஆப் மார்க் 161 வரை பெற்றவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X