பட்ஜெட் எதிரொலி: பங்கு சந்தையில் பெரும் சரிவு
மும்பை: பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால், பங்குச் சந்தை பெரும் சரிவுக்குள்ளானது.
பிற்பகல் ஒரு மணிக்கு 713 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். நிப்டியிலும் சரிவுப் போக்கே தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் துறையினருக்கு அரசு நிறுவனங்களை தாரை வார்க்கும் திருப்பணியை மத்திய அரசுகள் செய்து வந்தன. குறிப்பாக வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அரசுத் துறை முதலீடுகளை விலக்கிக் கொள்வதற்காகவே ஒரு தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டது. உலகில் எந்த பெரிய நாடும் செய்யாத 'சாதனை" இது!
இந்தப் பணியை காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அவரது விசுவாசத்துக்குரிய ப சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து செய்து வந்தனர்.
இந்த நேரம் பார்த்து உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதற்கு தனியார் துறையினரின் பொறுப்பற்ற தன்மை மற்றும் ஊழல்தான் காரணம் என அந்தந்த நாட்டு அரசுகள் குற்றம் சாட்டின. தொழில்துறையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளே, வேறு வழியின்றி மக்கள் பணத்தை தனியார் துறையில் முதலீடு செய்து அந்த நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று.
இதைப் பார்த்த பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய பொருளாதாரம் இந்த வீழ்ச்சிக் காலத்தில் ஸ்டெடியாக நிற்கக் காரணம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களே என்று சமாளித்தார்.
இந்த எண்ணம்தான் இப்போது பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் அரசு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள் போன்றவை தனியாரின் கைகளுக்குப் போகாது என்றும், தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என்றும் பிரணாப் முகர்ஜி இன்றைய பட்ஜெட்டில் தெரிவிக்க, அதுவரை ஏறுமுகத்தில் இருந்த மும்பை பங்குச் சந்தை, சரேலென வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.
வங்கித் துறைப் பங்குகள் மற்றும் ஐடி பங்குகள் மட்டும் ஓரளவு தப்பித்தன. மற்றவை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன.
பிற்பகல் 1 மணிக்கு 713 புள்ளிகளை இழந்த சென்செக்ஸின் வீழ்ச்சி சற்றே மட்டுப்பட்டது. இப்போது 627 புள்ளிகள் இழப்புடன் சென்செக்ஸில் வர்த்தகம் நடக்கிறது.
நிப்டியில் 168 புள்ளிகள் சரிந்துள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications