இலங்கைத் தமிழர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு - கருணாநிதி பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து இன்று அவர் தெரிவித்த கருத்து..

பிரதமர் மன்மோகன் சிங் முன்பு அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறு வாழ்வுப் பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதிக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்த பட்ஜெட்டால் பலன் கிடைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முன்னோடித் திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்பு புதுப்பித்தல் திட்டம், நகர்ப்புற ஏழைகள் உள்ளிட்டோருக்கான திட்டங்களுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

விவசாயக் கடன்களை அதிகரிக்கவும், வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+