ஐ.நா.வை மாற்றியமைக்க இந்தியா பாடுபடும்-பிரதமர்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம். இன்னும் பாதுகாப்பு கவுன்சில் அப்படியேதான் உள்ளது. தற்போதுள்ள கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து உறுப்பினர்களுக்கு மட்டும் வீட்டோ அந்தஸ்து கொடுத்து வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.
ஐ.நா. மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும்.
பாதுகாபபு கவுன்சிலில் இந்தியாவுக்குரிய இடத்தைப் பெறுவதிலும் உறுதியாக இருக்கிறோம். நிச்சயம் அந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications