இலங்கையில் நெருக்கடி நிலைச் சட்டம் நீட்டிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த நிலையிலும் மீண்டும் நெருக்கடி நிலைச் சட்டத்தை நீட்டித்துள்ளது இலங்கை அரசு.
மேலும் ஒரு மாதத்திற்கு நெருக்கடி நிலைச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ள விடுதலைப் புலிகளையும் ஒழிப்பதற்காக நெருக்கடி நிலைச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.
நாடாளுன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 103 பேர் வாக்களித்தனர்.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்த சட்ட நீட்டிப்பு மூலம் சந்தேகப்படும் யாரையும் காலவரையில்லாமல் சிறையில் அடைத்து விசாரிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.
சட்ட நீடிப்பு குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், விடுதலைப் புலிகள் இன்னும் கூட மிரட்டலாகவே உள்ளனர். எனவே மிச்சமுள்ள போராளிகளையும் பிடிக்கும் வரை நெருக்கடி நிலை அமலில் இருக்கும்.
மரபு வழியிலான போர் முடிவடைந்து விட்டாலும் கூட தீவிரவாதத்தின் நிழல் இன்னும் போகவில்லை என்றார் அவர்
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நெருக்கடி நிலை தொடர்ந்து அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications