மலேசியாவுக்கு கேட்டமைன் கடத்தியவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு போதை பொருள் கடத்த முயன்றவரை திருச்சி விமான நிலைய சுங்கா இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது. இவர் தனியார் விமானம் மூலமாக மலேசியாவுக்கு செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்கா இலாகா அதிகாரிகள் அவரை வழிமறித்து திடீர் சோதனையிட்டனர்.
அப்போது அவரிடம் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு சுமார் ரூ 45 லட்சம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து சுங்க இலாகாவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications